திரையரங்கில் அடிதடி- கொத்தாக 13 ரவுடிகளை தட்டி தூக்கிய கோவை போலிஸ்..!

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ரவுடிகளுக்கு இடையான மோதலை அடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி தாதா ரவுடி கும்பலில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிரம். அதன் அடிப்படையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி வழக்கில் 30 நபர்களை அடையாளம் கண்ட போலீசார், ஒரே நாளில் 13 பேரை கைது செய்திருக்கின்றனர். போலீஸாரால் கைதானவர்கள் மீது ஆயுதங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக ஆயுதச் சட்டம் பதியப்பட்டிருக்கின்றது..