கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்:நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம்-அதிர்ச்சி தரும் வீடியோ.!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். மழை காலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த நீரை நிரந்தரமாக கழிவுநீர் சாக்கடை மூலம் வெளியேற்ற அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி நிரம்பி அப்பகுதியில் குளம் போல் தேங்கி உள்ளது. உடனடியாக கழிவு நீரை வெளியேற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் இல்லை என்றால் நோய்க்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு நோயை உருவாக்கும் மருத்துவமனையாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் உடல்நிலை கருத்தில் கொண்டு உடனடியாக அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..