கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது..!

கரூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகன் முத்தையா (வயது 21) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கோவில்பாளையம்சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அவரை கைது செய்தார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..