கோவை நர்சிங் மாணவி திடீர் மாயம்… கால் டாக்சி டிரைவருடன் ஓட்டம்..!

கோவை பீளமேடு மல்லினார் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்.அவரது மகள் நட்சத்திரா (வயது 20 7இவர் கோவையில உள்ள ஒரு தனியார் நரசிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 4ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை..இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சரத்குமார் என்பவர் நட்சத்திரா வின் தாயார் பூங்கொடிக்கு செல்போன் செய்து அவரது மகள் தன்னுடன் இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம். இது குறித்து பூங்கொடி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..