வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்தவர் கைது..!

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் உக்காஷ் ( வயது 22) இவர் நேற்று பீளமேடு வி .கே .ரோடு, ரொட்டி கடை மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்து விட்டார் . இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து சின்னியம்பாளையம் சி.ஏ.பி. வீதியைச் சேர்ந்த ஜெகத் ஹரி என்ற சக்தி (வயது 20) என்பவரை நேற்று கைது செய்தார்.