கோவை மருத்துவ மாணவர் திடீர் மாயம்..!

கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணபால் .இவரது மகன் சானபால் (வயது 21) இவர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 7-ந்தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவில் இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து இவரது தயார் அனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.