கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் அருகே ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த சிலர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் இல்லை. குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply