ஆத்துப்பாலம் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் அருகே ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த சிலர் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் இல்லை. குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.