தீபாவளிக்கு துணி எடுக்கச் சென்ற கோவை ஐ.டி. பெண் ஊழியர் எங்கோ மாயம்..!

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள மயிலேறி பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் அன்பு கிருத்திகா( வயது 26) பி எஸ்.சிபட்டதாரி. இவர் கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் தனது அத்தையுடன் கோவை ஆர் எஸ் புரம் . ரோட்டில் ஒருவணிக வளாகத்தில்உள்ள துணிக்கடைக்கு தீபாவளிக்கு துணி எடுக்க சென்றார்.துணி எடுத்துக் கொண்டிருக்கும்போது அன்பு கிருத்திகா திடீரென்று மாயமாகிவிட்டார்.இதுகுறித்து அவரது தந்தை செல்வம் ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் அவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பிரபு என்பவரிடம் காதல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது,அவருடன் எங்கோ மாயமாகி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் தேடி வருகிறார்கள்.