மும்பை துணி வியாபாரிடம் 1.86 கோடி அபேஸ் – கோவை தம்பதி நூதன மோசடி ..!

கோவை : மும்பையைச் சேர்ந்தவர் பாசன்ட் ஆர். சோனி.துணி வியாபாரி. இவர் கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த துணி மொத்த வியாபாரிகளான மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோரிடம் துணி வியாபாரம் தொடர்பாக நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில் துணி வாங்குவதற்காக இவர்களிடம் முன் பணமாக ரூ. 1 கோடியே 86 லட்சத்து 62 ஆயிரம் வங்கி மூலம் அனுப்பி வைத்தார் பணத்தைப் பெற்றுக் கொண்ட தம்பதி துணி அனுப்பாமலும்,பணத்தை திருப்பி கொடுக்காமலும் மோசடி செய்து விட்டனர். இது குறித்து பாசன்ட் ஆர். சோனி பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.