கோவை ஓட்டல் அறையில் விஷம் குடித்து ஊழியர் தற்கொலை..

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு (வயது 25). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இதன் உரிமையாளருக்கு சொந்தமாக காந்திபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஓட்டல் அறையில் இருந்த ரகு திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். ரகு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.