பிளஸ்1 மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 10 ஆண்டு சிறை – கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்ற ராஜன் (வயது 35) இவர் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2019 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் அவர் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என்று சிறுமியிடம் வெள்ளியங்கிரி கூறியுள்ளார் .இதனால் அந்த சிறுமி வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி படித்த பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. அப்போது சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாயை வரவழைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அவரிடம் கேட்டார். அப்போது சிறுமி தன்னை உறவினர் வெள்ளியங்கிரி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார். வெள்ளிங்கிரி சிறுமிக்கு உறவு முறையில் சித்தப்பா (அப்பாவின் தம்பி) ஆகும் .இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2020 ஆம் ஆண்டு அனைத்து மகளீர் போலீசார் வெள்ளிங்கிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை கர்ப்பமாகிய சித்தப்பா வெள்ளியங்கிரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.