கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பயங்கர ‘தீ விபத்து – ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் ..!

கோவை சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – ஆயில் ஸ்டோர் நடத்தி வருபவர் சுரேஷ் ( வயது 48 ) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடை காவலாளி சுரேஷ்க்கு போன் செய்து கடையில் தீப்பிடித்து எரிவதாக கூறியுள்ளார். இதை யடுத்து சுரேஷ் அங்கு வந்தார். அப்போது கடையில் வைத்திருந்த பாஸ்போர்ட்,பிறப்பு சான்றிதழ், ஆர்.சி. புக் கம்ப்யூட்டர் ,பிரிண்டர் சிசிடிவி கேமரா டாக்குமெண்ட் பைல்ஸ் மற்றும் மளிகை சாமான்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். சேதம் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.