கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பக்கம் உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர் செல்லப்பன், இவரது மகள் நிர்மலா ( வயது 20 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ (. ஐ.டி) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.பீளமேடு பிருந்தாவன் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த 29ஆம் தேதி விடுதியில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை செல்லப்பன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.