கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்- காதலனுடன் ஓட்டமா..?

கோவை போத்தனூர், காந்திஜி ரோடு சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் மதுமிதா (வயது 17) இவர் கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.இவர் ஒரு வாலிபரை காதலிப்பதாக தன் தாயாரிடம் கூறினார்.அவர் மதுமிதாவுக்கு அறிவுரை கூறினார்.இந்த நிலையில் தாய் வெளியே வேலைக்கு சென்றிருந்தார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது மகளைக் காணவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் தாயார் பாண்டிய லட்சுமி புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..