கோவையில் 110 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது..!

கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள இந்திரா நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவர்களிடம் 110 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் ஆறுமுகம் நகரை சேர்ந்த அசோக் (வயது 30) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 27 ) மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்த ஜெபதுரை (வயது 52) என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்து 110 கிலோ குட்காவும்,இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது..