கோவை கல்லூரி மாணவி மாயம்..!

கோவை கல்லூரி மாணவி மாயம்..  கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், அவரது மகள் கிருத்திகா( வயது 20) வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது அக்கா காவியா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்