பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது..!

பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது.. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது..  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு,
குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49)பாஜக கிளைத்தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது 69) சித்தி ரத்தினம்மாள் (வயது 58 )ஆகியோரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3பேரில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து( வயது 24) மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.அவனை போலீசார் கைது செய்தனர்.அவரை போலீசார் ஆயுதங்களை எடுத்து கொடுக்க அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார் அப்போது தவறி விழுந்து அவரது காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன்வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் ( வயது 27 )தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தலாபுரத்தை சேர்ந்தவனராஜ் மகன் விஷால் என்ற சோனை முத்தையா (வயது 20) ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இவர்களைப் பிடிக்கபோலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி ,டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில்,திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன்,கூடுதல் எஸ்பி பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருச்சி,மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர் .இந்த நிலையில் போலீசார் தேடிய வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் விஷால் என்கிற சோனை முத்தையா ஆகிய 2 பேரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்..இதையடுத்து அவர்கள் 2பேரும் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களில் வெங்கடேசன் என்ற ராஜ்குமாரை போலீசார் விசாரணைக்காக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் இரு கால்களிலும் சுட்டனர.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்..இந்த நிலையில் கோர்ட்டில் சரணடைந்த வெங்கடேசன் தந்தை அய்யப்பனையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் 5-வது குற்றவாளியான நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் அய்யப்பன் மகன் செல்வம் என்ற வெங்கடேசை போலீசார் தேடி வந்தனர்.அவரை இன்று அதிகாலையில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி போடும் போது தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது .இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அய்யப்பனின் மகன் ஆவார் .ராஜ்குமாருக்கு அண்ணன் ஆவார்.இவர்தான் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் தப்பி செல்வதற்கும் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்தது,எனவேஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.