போக்சோ வழக்கில் கைதான கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..!

கோவை துடியலூர் வரப்பாளையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் , பொன்னூத்து அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்ற தம்பா (வயது 67)இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு துடியலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக காச நோயால் அவதிப்பட்டு வந்தார் .இந்த நிலையில் நேற்று சிறையில் வைத்து அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் . இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..