கோவை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் சரவணன். இவர்களும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரகாசுக்கும், மணி மற்றும் சரவணணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மணி மற்றும் சரவணன், பிரகாசிடம் பேச வேண்டும் என பட்டணம் புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும்படி கூறினர். இதையடுத்து பிரகாஷ் அங்கு சென்றார். அவர்கள் 3 பேரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மணி மற்றும் சரவணன் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகாசை சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இது குறித்து பிரகாஷ் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மணி மற்றும் சரவணன் தேடி வருகின்றனர்.
முன்விரோதத்தால் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- வாலிபர்கள் 2 பேர் தலைமறைவு..!
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2022/10/941055-937.webp)
Leave a Reply