சேவல் சண்டை சூதாட்டம் – 20 பேர் கைது..!

கோவையை அடுத்த பேரூர் பக்கம் உள்ள முதலிபாளையம் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கரடிமடை , முருகன் ,செம்மனூர் ஆறுச்சாமி ஸ்டீபன் ராஜ், கரடிமடை ரவி, உலகநாதன் குப்பனூர் தேவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .5 சேவல்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கோட்டூர் எஸ். பொன்னாபுரம் ஆத்து மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக எஸ். பொன்னாபுரம் செல்வராஜ் ( வயது 40) கொங்கல்ப்பன்பாளையம் விவின் குமார் (வயது 21) கரட்டுப்பாளையம் கார்த்திக் குமார் (வயது 37) சமத்தூர் சந்தோஷ ( வயது 25 )கோட்டூர் மலையாண்டிபட்டினம் கஜித்தரன் ( வயது 31) செம்மனூர் ( சதீஷ் 25) மோகன் (வயது 40) எஸ். பொன்னாபுரம் கார்த்திக் ( வயது 30 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல ஆனைமலை பக்கம் உள்ள தண்டுக்கடவு பதி வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக காளியாபுரம் கார்த்திக், சிவப்பிரகாஷ், உடைய குளம் தாரணி. காளியாபுரம் மாசிலாமணி, கோழிப்பண்ணை கனகராஜ் சேத்துமடை கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்களும், பணமும் , 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.