கணவருடன் கடைக்குச் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு..!

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் அங்கன்னன். இவரது மனைவி சுகந்தி (வயது 39) இவர் நேற்று கோவை பெரியகடை வீதியில் சாமான்கள் வாங்க தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தர்கா அருகேசென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து சுகந்தி கடைவீதி போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் பாமா வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்..