கோவை டாஸ்மாக் பாரில் மது வாங்கியதில் கோஷ்டி மோதல் – பெண் உள்பட 4 பேருக்கு பீர் பாட்டில் குத்து..!

கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 24 ) இடிகரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 18) இவர்கள் இருவரும் நேற்று செங்காளி பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றனர். மது வாங்கும்போது இவர்களுக்கும் வட்டமலை பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 25) இவரது தாயார் ராமலட்சுமி ( வயது 45) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர். பின்னர் பரத்தும் சபரிநாதனும், வட்டமலை பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே நடந்து வந்தனர் .அப்போது செல்வகுமார் அவரது தாயார் ராமலட்சுமி ஆகியோர் இவர்களை வழிமறித்து பீர் பாட்டிலால் குத்தினார்கள். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இது குறித்து துடியலூர் போலீசில் பரத் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார். அவரது தாயார் ராமலட்சுமியை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வட்டமலைபாளையத்தை சேர்ந்த செல்வக்குமார் துடியலூர் போலீசில் கொடுத்த புகாரின் தன் னையும் தனது தாயார் ராமலட்சுமியையும் , அதே ஊரைச் சேர்ந்த பரத் சபரிநாதன் ஆகியோர் சேர்ந்து பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர்களில் பரத் ( வயது 24) கைது செய்யப்பட்டார் . சபரிநாதனை தேடி வருகிறார்கள்..