டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு.. ட்ரோன்கள் பறக்க தடை..!

மிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தடைந்தார். முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சியில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.