சிறப்பாக பணியாற்றிய கோவை போலீசார் 12 பேருக்கு முதலமைச்சர் பதக்கம்.!!

தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அதன்படி இந்தாண்டு கோவை மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் திலக் ( துடியலூர்) குப்புராஜ் (மதுக்கரை) எஸ். ரேணுகாதேவி ( உக்கடம்) ராதாகிருஷ்ணன் ( சிறப்பு பிரிவு) கருப்புசாமி பாண்டியன் ( கிணத்துக்கடவு) அப்சல் அகமது ( சிறப்பு நுண்ணறிவு பிரிவு )விவேக் ( உக்கடம்) சிறப்புசப் இன்ஸ்பெக்டர்கள் என். உமா (கடைவீதி) வேல்முருகன் ( கோவை மாநகரம்) சந்திரசேகர் (லஞ்ச ஒழிப்புத்துறை கோவை) மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் பழனிச்சாமி ஆகியோருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது..