காதலனை கண்டித்தால்.. காதலி தூக்கிட்டு தற்கொலை..

கோவை அருகே உள்ள வடவள்ளி ,காளிதாஸ் நகரை சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. சம்பவத்ததன்று இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலனுடன் வாளையார் பகுதிக்கு சென்று விட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை அவரது காதலனை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் பாத்ரூமில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.