பிரபல நகை கொள்ளையன் கைது..!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய பவர்களை கைது செய்ய கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை நேரத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகபடும்படி  சென்ற 3 பேர்களை துரத்திச் சென்றபோது போலீஸ் ஜீப் இரும்பு கம்பியில் மோதி சேதமடைந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தீவிர விசாரணை நடத்திய தற்போதைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு நகை பறிப்பில் ஈடுபட்ட சூலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் கோபிநாத் ( வயது 22) மற்றும் இன்ஸ்பெக்டர் துரத்தியபோது தப்பி ஓடிய 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க செயின் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை சோழவந்தானை சேர்ந்த மணி ஐயப்பன் ( வயது 35) என்ப வரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவன் மீது சிவகங்கை மாவட்டம் சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, சிவகங்கை மாவட்டம் திரிபுவனம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு மற்றும் நகை பறிப்பு உட்பட மொத்தம் 32 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் துரத்தியபோது தப்பிய 3 பேரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.