கோவையில் வீட்டுக்குள் நுழைய முயன்ற யானை: போ போ என மெதுவாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ...

கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி… கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ் சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் ...

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள கம்பல்பாரி பகுதியை சேர்ந்தவர் நல்ல பொம்மு. அவரது மனைவி திருமலை யம்மாள் (வயது 57 ) கூலி தொழிலாளி.இவர் நேற்று அங்குள்ள கொல்லே கவுண்டனூரில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ...

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் பிரபாகரன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத ...

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் ...

கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் உள்ள ஞான சுந்தரி நகரை சேர்ந்தவர் கந்தசாமி, இவரது மனைவி தனலட்சுமி ( வயது 90) இவர் நேற்று அவரது வீட்டில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து ...

கோவை :சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் சபரிவாசன் (வயது24) இவர் சின்ன தடாகத்தில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள மாடியில் தங்கி இருந்தார் .அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால் இவரது மகன் வரதயகிரிவு ராம் (வயது 22) பி.டெக் பட்டதாரி.இவர் சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.இந்த நிலையில் நேற்று அவர் தனது பெறோரிடம் தலைவலிப்பதால் ...

கோவை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ...

கோவையில் ஒற்றைக் காட்டு யானை: இரும்பு கதவை உடைத்து விட்டு, வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாய நிலங்களுக்குள் சுமார் 10 யானைகள் கொண்ட யானை கூட்டம் உள்ளே சென்று அட்டகாசம் செய்து வந்தன. பெரும் போராட்டத்திற்கு பின், ...