காஷ்மீரின் கிறிஸ்த்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட மார்வா பகுதியில் நேற்று ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்குண்டு- நவபாச்சி என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் வரைபடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கே படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இரண்டு கையெறி ...

கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள் –  கோவையில் வெளியான பரபரப்பு காட்சிகள் கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை, வரப்பாளையம் , பொன்னூத்து உள்ளிட்ட கிராமங்களில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் காட்டு ...

கோவை அருகே உள்ள இருகூர், டி. எஸ் .கே .நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவிதா( வயது 45)இவர் நேற்று அங்குள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்று விட்டது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார்.மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) நகைத் தொழிலாளி.இவரது மனைவி காயத்ரி (வயது 29) இவர்கள் இருவருக்கும் கடந்த 75 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் காயத்ரி தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம். கடந்த 10-ந் தேதி கணவரிடம் சொல்லாமல் காயத்திரி ...

கோவை சாய்பாபா காலனி சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் மனோஜ் குமார் (வயது 23) இவர் நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் மனோஜ் குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார் வயது 24) அவுடேஷ்குமார் (வயது 24) இவர்கள் இருவரும் கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள சிராபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதற்காக அந்த நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர் .நேற்று இருவரும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க மலுமிச்சம்பட்டிக்கு வந்தனர். ...

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர்  கவுதம் (வயது 22). விக்னேஷ் (22). நேற்று இரவு 9.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அவினாசி- கோவை ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிளில் கணியூர் மேம்பாலத்தை கடந்து சென்று கொண்டு இருந்த ...

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை’ சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு ...

கோவை : ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கத்தை விட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் ஆயிரம் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் ...

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலைச் சந்திப்பில் வேகமாக வந்ததாகத் தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் ...