லாரி மீது மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி..

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம் வி.ஜி.பி .பிரேம் நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 47) இவர் நேற்று சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்குள்ள ஒரு பிளாசா முன் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.