வாஷிங்டன்: அமெரிக்காவில் வெடிகுண்டு (BOMB) பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் அந்நாடு முடங்கி உள்ளது. மொத்தம் 18 லட்சம் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும் வீடுகளில் அதுவும் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை போல் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட வளர்ந்த நாடுகளில் ...

புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், ...

சீனாவில் கோவிட் அலை இரண்டு மில்லியன் மக்களை கொல்லக்கூடும் என நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். சீனாவில் கடந்த 7ஆம் தேதி அன்று கட்டுப்பாடுகள் வியத்தகு முறையில் தளர்த்தப்பட்டது. தேசிய கோவிட் – 19 அலையுடன் சீனா போராடி வருவதால், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அவசரகால வார்டுகள் அதிகமாகி வருகின்றன. டிசம்பரின் ...

கோவை: வெளிநாட்டில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:- கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் ...

கோவை அருகே உள்ள வேடப்பட்டி, பெருமாள் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 62) சமையல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நரசாம்பதி குளம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று கால் தவறி குளத்துக்குள் விழுந்தார். நீரில் மூழ்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசில் ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் தனது புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சுந்தர கவுண்டனூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை அருகில் உள்ள நீலாம்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 73) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் தனது மனைவி நல்லம்மாளுடன் ( வயது 60) மொபட்டில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பீளமேடு தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் ...

பொள்ளாச்சி தாலுகா போலீசார் நேற்று மாலைகுள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் ( வயது 35 )பொள்ளாச்சி அழகுபுரி ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது. இனால் அங்கு பெரும்பாலான பகுதிகள் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. புவ வெப்பமயாமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. வெயில், குளிர் அல்லது மழை என எதுவாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக ...

பீஜிங்: முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட நாடான சீனாவில் தற்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறதாகவும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அங்கு உச்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக ஒரே நாளில் 3 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது உலக நாடுகளுக்கு கொரோனா வைரசை பரப்பி விட்ட சீனா, ...