2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து – விவசாயி பலி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் தனது புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சுந்தர கவுண்டனூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக புதுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் ( வயது 35 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.