மொபட் மீது லாரி மோதி கணவர் கண் முன்னே மனைவி பரிதாப பலி…

கோவை அருகில் உள்ள நீலாம்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 73) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் தனது மனைவி நல்லம்மாளுடன் ( வயது 60) மொபட்டில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பீளமேடு தனியார் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது ,இதில் நல்லம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார் .கணவர் சுந்தரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் சுந்தரம் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் சக்திவேல்(வயது 32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.