குளத்தில் தவறி விழுந்து சமையல் தொழிலாளி பலி..

கோவை அருகே உள்ள வேடப்பட்டி, பெருமாள் நாயுடு லேஅவுட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 62) சமையல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நரசாம்பதி குளம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று கால் தவறி குளத்துக்குள் விழுந்தார். நீரில் மூழ்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசில் அவரது மனைவி பாஞ்சாலி புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.