சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை வழங்கப்படும் என சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்படஉள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் ...

மதுரை : பாஜக  சார்பில் மாநில அளவிலான ‘மோடி கபடி’ இறுதிப் போட்டி செப்டம்பர் 27 முதல் 30 வரை மதுரையில் நடக்க உள்ளது. தமிழக பாஜக  சார்பில் ‘மோடி கபடி’ என்ற பெயரில் பிரதமர் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் மாநில அளவில் ‘லீக்’ போட்டியாக நடத்தப்பட உள்ளது. 234 சட்டசபை தொகுதிகளிலும் ...

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஹைகோர்ட்டில் இன்று முதல் நடக்க உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதிமுகவில் ...

காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலம் வென்றார். தன்னால் நாட்டிற்கு தங்கம் வென்று கொடுக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் பூஜா கெலாட். தங்கம் வெல்ல முடியவில்லை என்று வருந்திய பூஜா கெலாட்டை தேற்றும் விதமாக, நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். அதனால் மன்னிப்பு கேட்கவேண்டாம். உங்கள் வாழ்க்கை எங்களை ஊக்கப்படுத்துகிறது; மகிழ்ச்சியளிக்கிறது ...

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ...

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூண்டோடு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது பாஜகவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மறுபுறம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இணைந்துள்ள 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் முழு ...

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜர் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ...

டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 6ம் தேதியான இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ...

தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை ...

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கி.மீ. கணக்கில் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் தொடக்கத்தில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் ...