சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி ...

இந்தோனேசியா: வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும்… டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் ...

சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளன. சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்ட கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ...

இந்தோனேசியாவில் நடந்துவரும் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை  பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார். இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த நட்சத்திரஹோட்டலில் உலகத் தலைவர்கள் இன்று முதல் கூடி பல்வேறு அம்சங்கள், ...

கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது.. வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற இருந்தது. இதற்காக அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் மாநகர காவல் துறை அனுமதி வழங்க மறுக்கின்றனர். எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் இரண்டாவது நாளான நிகழ்வு அவர் விசாகப்பட்டினத்தில் 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டை வைத்து பேசினார். அப்பொழுது அவர் கொள்கையில் இப்படித்தான் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் நாட்டின் உள்கட்ட அமைப்பு வளர்ச்சியை விரைவுப்படுத்துவது மட்டுமின்றி, ...

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு ...

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கான இழப்பீட்டினை ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பயிரிடப்பட்ட அனைத்து பயிர்களும் ...

இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்ததால், குனியமுத்தூர் 87, 88 வது வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது தாழ்வான பகுதி. எப்போது மழை பெய்தாலும், ...