சென்னை: ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் ...

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ...

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரின் பதவி பறி போக இருப்பதாக சில உடன்பிறப்புக்களே தகவலை கசிய விட்டு வருகின்றனர். தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மீதும், சில திமுக முன்னோடிகள் மீதும் சொத்துக் ...

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் சாதகமாக வந்திருந்தன. இருப்பினும், தேர்தல் ஆணையம் முறையாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமலிருந்தது. பிறகு எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம், எடப்பாடி ...

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது. சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை ...

கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பும் அதிமுக.. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் அதிமுகவினர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராகவும் மற்றும் அதிமுக சட்டவிதிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பேசி வருகின்றனர். இன்றுடன் ...

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 60-க்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் நடந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ...

தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுகவிலிருந்து நீக்கம்.. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ...

ராம்நகர்-கனகபுரா தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தம்பி சுரேஷும் நேற்று மனு தாக்கல் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ராம்நகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் வருவாய் துறை அமைச்சர் அசோக் களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் பிரமாண்டமான ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை ...