சென்னை: “காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று மாநில சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.19) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ...
பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது rsquo; என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். ‘பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ...
கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும், அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு உள்ளிட்ட வேட்பாளர்கள் ...
பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கி விட்டது. இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் ...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெபெனி குவேரா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், ...
பொங்கல் விழா தொடர்பான கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா தளங்களுக்கு செல்வது, ஜல்லிக்கட்டு போட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் என மாநிலம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்நேற்று திருவள்ளுவர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் ...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார் அதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர் என்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ...
புதுடெல்லி: பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களுடன் ...
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார். திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் ...













