கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள், பேத்தி சென்னை வருகை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரவேற்பு..!

ல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெபெனி குவேரா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர்.

அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மூத்த தலைவா் டி.கே.ரங்கராஜன், சி.ஜ.டி.யு. மாநில தலைவா் அ.சௌந்திரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வரவேற்றனர்.