ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் ...

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் ...

கடலூர் : பாஜக மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று  நடைபெற்றது . பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேபோல் 10 ஆண்டுகள் கட்சியிலேயே இல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்றேன் என்று கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் போட்டியிடும் தைரியம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ...

சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார். ...

திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து குதிரை வண்டியில் பயணித்து மகிழ்ந்தார். திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் ...

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் இடப்பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் கூட்டணியில் இருந்து விலகியது. அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே அவ்வப்பொழுது கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இருப்பினும் தமிழக பாஜக ...

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் பதவியேற்றிருக்கிறார். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி வரலாறு படைத்திருக்கிறார், அருணா மில்லர். இதையடுத்து இந்த மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையுடன் முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும், இதன்மூலம் முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையையும் ...

ஈரோடு கிழக்குத் தொகுதி.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம் ஈரோடு: கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த 4-ம் தேதி இறந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 500 மின்னணு வாக்குப்பதிவு ...

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அறிவிப்பை அந்தக் கூட்டணி சாா்பில் திமுக தலைமை வியாழக்கிழமை ...