சென்னை: திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று கிண்டியில் பேரணி நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்்ளச் சாராயத்தால் ...
தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் ...
திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மதுரை சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ...
கோவை: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை ...
2023ஆம் ஆண்டிற்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மேலும் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெற்ற ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு ...
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் கூடவே 8 அமைச்சர்களுக்கும் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக ...
ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து.. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி நேற்று திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. மே மாதம் ...
நாம் தமிழர் கட்சி சார்பில் இனஎழுச்சி பொதுக்கூட்டம் தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விலக்கு அருகே நடந்தது. கூட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது பேசிய சீமான், “புரட்சியை முன்னெடுக்க புரட்சிகரமான அரசியல் கட்சி அவசியம். புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் இயக்கத்துக்கு புரட்சிகர தத்துவம் இருக்க வேண்டும். இந்திய அரசு, ...
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை ...
தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அப்போது பிரசார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் விதமாக ஸ்ரீபெரும்பத்தூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது, ...













