உலகளாவிய புவிசார் அரசியல் காரணமாக பதட்டங்கள் இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் வளரும் நாடுகளின் குரலை வலுப்படுத்த முடியும் என்பதை ஜி-20 நாடுகளை இதற்கு முன்பு தலைமையேற்று நடத்திய இந்தோனேசியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்த இந்தியாவும் உறுதி செய்துள்ளது. வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜ-20 உச்சி மாநாடு ...

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த உச்சி மாநாடு தொடங்கும் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்து அளிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு ...

திருச்சி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை ...

போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவும், ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜ சார்பில் 5 ஜன் ஆசிர்வாத யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ...

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் கட்சியின் நாடாளுமன்ற கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அவரின் ஜன்பத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.5) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பா் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற சிறப்புக் ...

புதுடெல்லி: 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பிரதமர் மோடி பணியாற்றி வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014-ல் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதைத் ...

ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை ...

சென்னை: 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை பாஜக, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என ...

சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், ...

வாஷிங்டன்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை ...