கோவை – மும்பை இடையே இயக்கப்படும் குர்லா விரைவு ரயில், மின்மயமாக்கல் பணியால் ஒசூர் செல்ல 40 நிமிடங்கள் தாமதமாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி – ஒசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால், கோவையில் இருந்து மும்பை ...

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை அடைக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், ...

கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை. தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை எதுவும் ...

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் நீதிபதி எம்.துரைசாமி. இவரை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. புதிய பதவியை நீதிபதி எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை ஏற்றுக் கொண்டு வழக்குகளை விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த ...

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிகிறது அதனை ஒட்டி புதிய துணைவேந்தர் நியமிப்பதற்கு கல்வி அமைச்சகம் புதுச்சேரி பல்கலை செயற்குழுவில் உள்ள இருவரின் பெயரை பரிந்துரை செய்ய கூறியிருந்தது. இந்நிலையில் துணைவேந்தர் குர்மித் சிங் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ...

கோவை: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்ததால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. யூக ...

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும் ...

கோவை: சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழு கூட்டம், கோட்ட மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவையில் இருந்து ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தினர். அதில் அவா்கள் கூறியிருப்பது:- 2023 பிப்ரவரியில், கோவை ரயில் நிலையத்தின் 150-வது ஆண்டு தொடக்கத்தை, சிறப்பு விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும். ...

கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை ...

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ...