5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வேளையில் கடந்த 10 நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை என்று மீண்டும் எழுந்துள்ளது. இன்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட் என ஐந்து மாநிலங்களில் 690 ...

புதுடில்லி: மீண்டும் அனுமதி…கொரோனா பரவலை தடுப்பதற்காக ரயில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்குவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக தலையணை மற்றும் போர்வை பெறும் வசதி ரயில்வே நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து போர்வை மற்றும் தலையணையை பயணிகள் பெற்றுவந்தனர். இடையே கொரோனா தொற்று காரணமாக இந்த ...

மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ...

சென்னையில் இரண்டாவதாக விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையம் கிரீன்ஃபீல்டு வசதியை அமைப்பதற்காக, தமிழநாடு அரசு சிறப்பான நான்கு இடங்களை தேர்வு செய்து இருக்கிறது. தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய வசதிகள் போலவே செய்து தரப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாவதாக விமான நிலையத்தை அமைக்க ...

தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் ...

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் அமைதியான முறையில் நடைபெறும். அமைதி நிர்வாகமே ஒரு மாநலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி வெற்றி நடை போட வைக்கும். ...

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, பரோலில் இருந்தாலும் வெளியில் செல்ல ...

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 20 சதவீதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை சில தினங்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை ...

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி,தற்போது ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என ...

டெல்லி: பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட் சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை யூபிஐ தளத்திற்குள் இணைக்க முடியும். யூபிஐ பேமெண்ட் சேவை நமது பொருளாதாரத்தில் நிதி நிலைமையை ஊக்குவிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ...