மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க சிலர் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்பு முடித்தபின் ஒவ்வொருவரும் ஓராண்டு காது, மூக்கு, ...

சென்னை: தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்? தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த ...

சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை ...

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் ...

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவில்பட்டி – வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், கோவையில் இருந்து நாளை (ஜூன் 13) காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16322), திண்டுக்கல் – ...

சென்னை: மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மண்டலமருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ஏ.ஹபீப் முகமது, மருந்து உரிம அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் எம்.என்.ஸ்ரீதர், தரக் கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும், தாங்கள் ஏற்கெனவே வகித்து வரும் பதவியுடன் கூடுதலாக இப்பொறுப்புகளை ...

கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ...

ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் கொலை குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு ...

சென்னை: ‘ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, ‘டிக்கெட்’ எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது. சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.போலீசார் உரிய ஆவணங்களுடன், டிக்கெட் எடுத்து பயணம் செய்ய உத்தரவிடும்படி, ...