தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை விற்பனையாளர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இந்த ஆண்டு பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...
சத்தியமங்கலம்: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாகும். பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் மீன் பிடிக்கும் ...
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு.. தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 10,000 இலிருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞரின் பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுக ...
ஓய்வு பெறுகிறார் டிஜிபி சைலேந்திர பாபு.. தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..? வெளியான முக்கிய தகவல்..!!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த சில நாடுகளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிவருகின்றது. இதனை தொடர்ந்து போலீஸ் ...
இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் ஓவர்… 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார் ..!
மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க சிலர் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்பு முடித்தபின் ஒவ்வொருவரும் ஓராண்டு காது, மூக்கு, ...
சென்னை: தமிழக அரசு துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதனால் 5 லட்சம் ஊழியர்கள் பதவி இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்? தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த ...
சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை ...
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் ...