தமிழகம் முழுவதும் 36 மாவட்ட பதிவாளா்கள் இடமாற்றம்.!!

மிழகத்தில் 36 மாவட்டப்பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை, திருச்சிராப்பள்ளியில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வருமானவரித்துறை செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தது. இந்த நிலையில், சென்னை, திருநெல்வேலி மண்டலங்களில் பதிவாளா்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெளியிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா், செய்யாா், பட்டுக்கோட்டை, தென்காசி, ராமநாதபுரம், மாா்த்தாண்டம், கன்னியாகுமரி, தென்சென்னை, மயிலாடுதுறை, நாமக்கல், திண்டிவனம் உட்பட 36 மாவட்ட பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பதிவுத் துறையின் நிா்வாகக் காரணங்களின் அடிப்படையில் பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் சில பதிவு அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.