கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து குவியலை போலீசார் கார் வெடித்து சிதறிய சில மணி நேரங்களிலேயே கைப்பற்றினார்கள். 75 கிலோ மதிப்பிலான வெடி மருந்துகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கொரியர் வழியாக முபின் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த வெடி மருந்துகளை ...
கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த முருகன் கூலி தொழிலாளி. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதான 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி இடம் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அவரிடம் கூறியுள்ளார். ஆனால் முருகன் கேட்காமல் தொடர்ந்து சிறுமிக்கு ...
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் காரில் மர்ம பொருள் வெடித்து. இதில் கோட்டைமேடு எச் எம்.பி.ஆர் வீதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக 6. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடந்து வந்தது. இதில் தொடர்புடைய 5பேர் நேற்று ...
ஊட்டியில் எச்.பி.எப். பகுதியைச் சோ்ந்தவா் போரன் (வயது 44). தனியாா் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் போரன் சம்பவத்தன்று ஊட்டியில் இருந்து பிங்கா்போஸ்ட்க்கு பஸ் சென்றார். அப்போது மினி பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர் படியில் நின்று பயணித்தார். இதைப் பாா்த்த போரன் அவரை படியை விட்டு மேலே ஏறுமாறு கூறியுள்ளார். ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர். ...
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை ...
மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி ...
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து மொத்தம் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான் – ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளார் என போலீசார் புதிய ...
கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி, முகாம்பிகை நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 54 )இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி தினத்தில் காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க ...
கோவை உப்பிலிபாளையத்தில்உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் வீடு உள்ளது. இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் வீட்டைப் போட்டுவிட்டு வெளியூர் சென்று விட்டார்.வீட்டிலிருந்த உதவியாளர் ரூபி கனிமொழி என்பவர் வீட்டில் மின் விளக்கை எரியச் செய்து விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த விளக்கு ...













