பைக் திருடிய கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது..!

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் .இவரது மகன் இலக்கியன் ( வயது 20)அரசு பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் பீள மேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் தனது பைக்கை நிறுத்தி இருந்தார்.அதை யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து பீளமேடு போலீசில் இலக்கியன் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சாணத்தி பாளையத்தை சேர்ந்த நல்லசிவம் மகன் ஹரிஹரன் (வயது 20) நீலகிரி மாவட்டம் தும்மணட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் ஹரிஷ் குமார் (வயது 19) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து பைக் மீட்கப்பட்டது. விசாரணையில் ஹரிஹரன், ஹரிஷ் குமார் ஆகியோர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது..