பெண் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை,வெள்ளி, பணம் கொள்ளை – மர்ம நபருக்கு வலை..!

கோவை கணபதி ஸ்ரீ வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (வயது 44) இவர் கணபதியில் உள்ள எல்.ஐ.சி .ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திற்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள் அரை கிலோ வெள்ளி சாமான்கள் |பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த ரபினா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.