கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு ரத்தினபுரி நாராயணசாமி வீதியில் உள்ள சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் காரில் கஞ்சா வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை சோதனை செய்த போது அதில் 1950 கிராம் கஞ்சா இருந்தது ...
கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60). இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர். ...
கோவை தெற்கு உக்கடம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி .இவரது மனைவி செண்பகவல்லி ( வயது 60)இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாய் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற அஜித் குமார் (வயது 26) என்பவரை பார்த்ததும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ...
கோவை பீளமேடு,மாசாத்தி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41) நியூ சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோட்டில் பேஷன் துணிக்கடை நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பேண்ட் , சட்டைகள், ...
கோவை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா. (வயது 30) இவரிடம் கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் சுஜாதா மதுமோகன், ரவி, ராஜேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் அவர்கள் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்று கூறினார்கள். இதை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் ...
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கோவை சரவணம்பட்டி சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த காளப்பட்டியைச் ...
கோவையை சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கும், 16 வயது சிறுமியான பிளஸ் – 2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். மேலும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கல்லூரி ...
கோவை துடியலூர் என்ஜி ஜி.ஓ காலனி பக்கமுள்ள துரைராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் பிரபு . இவரது மனைவி சந்திர பிரபா, இவர் ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று டவுண் பஸ்சில் பயணம் செய்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார் .அப்போது இவரது கழுத்தில் ...
கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி இவரது மனைவி ஜெசிந்தா மேரி (வயது 42) இவரிடம் கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் .ஜெயா செல்வி ஆகியோர் அறிமுகமானார்கள்.அவர்கள் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பதாக கூறினார்கள்.இதை நம்பிய ஜெசிந்தா மேரி தனது ...













