கோவை செல்வபுரம்,பேரூர் மெயின் ரோட்டில் உள்ள குமாரபாளையத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கோவிந்தன் (வயது 83 ) இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அவரது தங்கை மகன் ஸ்ரீகாந்த் (வயது 45) என்பவர் கோவையில் நகைக்கடை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் குனியமுத்தூர் ரோட்டில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சாவும் 22 போதை மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...

கோவை போத்தனூர் வழியாக நேற்று முன் தினம் அதிகாலையில் கேரளாவை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈச்சனாரி ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றபோது அதன் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அந்த இன்ஜின் டிரைவர் உடனே இது குறித்து போத்தனூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ...

ஆவடி: ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி மோசடியாக பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற புது டெக்னிக்.. சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வேலை தேடுபவரா லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசையா என ஏகப்பட்ட விளம்பரங்கள் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட விளம்பரங்கள் இதைப் பார்த்த அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ...

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ம் ...

கோவை கணபதி பாரதி நகர் எப்.சி.ஐ ரோட்டில் ” சி. எம். சி .கேஸ் ரீப்ளேஸ்மென்ட் இன்போ .சிஸ்டெம் ” என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 3 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்த பணப்பெட்டியை திடீரென்று காணவில்லை .அதில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார் (வயது 42) சத்தியசீலன் மகன் அருண் ( வயது 29) ஆகியோரை கடந்த 11.12.2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது ...

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவில் ஆயுதங்களுடன் போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் என்பவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த ...

முகமூடி அணிந்து வந்த குற்றவாளி நான் வெட்டி கொலை செய்தது ஃபாரின் ஸ்டைல்…  முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என சொல்லி தப்பி ஓட்டம்.. ஆவடியை அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன் வயது 64. திருமண மண்டபம் வைத்து நடத்தி வருகிறார். இவரது 2 வது அன்பு மனைவி ஷர்மிளா வயது ...

கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம் என்றும், கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மற்றும் வீடியோக்களில் விளம்பரங்களை பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ 1000 வரை வருமானம் ஈட்டலாம் என்று ...